மும்பை: ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானிக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுததி உள்ளது. அவருக்கு வந்த மின்னஞ்சலில், “நீங்கள் எங்களுக்கு ரூ.20 கோடி கொடுக்க வேண்டும்.
இல்லையெனில், நீங்கள் சுட்டு கொல்லப்படுவீர்கள். இந்தியாவிலேயே மிகச்சிறந்த குறிபார்த்து துப்பாக்கியால் சுடுபவர்கள் எங்களிடம் உள்ளனர்” என்று இடம்பெற்றுள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த முகேஷ் அம்பானியின் பாதுகாவலர்கள், கொலை மிரட்டல் குறித்து காம்தேவி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.